ADDED : ஏப் 26, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் அருகே சுற்றுப்பகுதியில் பிரசித்தி பெற்ற நாட்ராயசாமி கோவில் உள்ளது. கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
அறநிலையத்துறை உதவி கமிஷனர், ரத்தினாம்பாள், ஆய்வர் அபிநயா கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இதில் 12,49,667 ரூபாய் காணிக்கை இருந்தது. இந்த உண்டியல் திறப்பின் போது கோவில் செயல் அலுவலர் மாலதி மற்றும் அறங்காவலர் குழுவினர் உடன் இருந்தனர்; உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.