sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு

/

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு

 சந்திர கிரஹணத்துக்கு முன் கோவில்களில் நடை அடைப்பு


ADDED : மார் 04, 2026 05:26 AM

Google News

ADDED : மார் 04, 2026 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சூரிய மற்றும் சந்திர கிரஹணம் ஏற்படும் காலங்களில், கோவில்களில் பூஜைகளை முன்கூட்டியே முடித்து, நடை அடைப்பது வழக்கம். அதன்படி, நேற்றைய சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, திருப்பூரிலுள்ள ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவில் உட்பட திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கோவில்களில், முன்கூட்டியே நடை சாத்தப்பட்டன.

அதிகாலை மற்றும் உச்சிகால பூஜைகள் முடிந்த பிறகு, நடைசாத்தப்பட்டன. உச்சிப்பூஜையும்,11:30 முதல், 12:30 மணிக்குள் முடித்து நடைசாத்தப்பட்டது. சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் நடைபெறவில்லை. இன்று அதிகாலை, சிறப்பு சாந்தி பூஜைகள் செய்து, கோபூஜையுடன் வழக்கமான பூஜைகள் நடைபெறுமென, சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் தெரிவித்துள்ளனர்.

திருமுருகன்பூண்டி திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், மாசி தேர்த்திருவிழா நடந்து வருகிறது. வழக்கமாக, 2 நாள் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரஹணத்தை முன்னிட்டு,நேற்று முன்தினம் ஒரேநாளில், மூன்று தேர்களும் வடம் பிடித்து, ஒரே நாளில் நிலைசேர்க்கப்பட்டன.






      Dinamalar
      Follow us