ADDED : பிப் 01, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்போற்சவம் நடந்தது. காங்கயம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த, 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடந்தது.
நேற்று கோவில் அடிவாரத்தில் உள்ள நந்த வனத்தோட்டத்தில் உள்ள தெப்பகுளத்தில் பரிவேட்டை - தெப்ப உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமி பரிவேட்டை மண்டபத்துக்கு எழுந்தருளியும், தெப்ப குளத்தை சுற்றி வலம் வந்தும், தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. பின், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுப்ரமணியர் திரும்பினார்.
வரும் 4ம் தேதி மாலை 3:00 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு மலை கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.