sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா

/

முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா

முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா

முத்திரை பதிக்கப்போகும் அவிநாசி சித்திரைத் தேர்த்திருவிழா


ADDED : ஏப் 26, 2025 11:01 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவுக்காக, தேர்களுக்கு வேகக்கட்டுப்பாடு முட்டி செய்வது, தேருக்கு சாரம் கட்டும் பணிகள், அலங்கரிக்கும் பணிகள், விக்கிரகங்கள் சுத்தப்படுத்தும் பணிகள் என தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர்த்திருவிழா, மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தேர்த்திருவிழாவுக்காக, கடந்த ஒரு வார காலமாக தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, இரும்பிலான ஆங்கில்களை கொண்ட சிறிய மற்றும் பெரிய தேர் கட்டும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது.

தேர் உறுதித்தன்மை

சான்றிதழ் பெறப்பட்டது

---------------

கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கூறியதாவது:

அவிநாசி தேர் திருவிழாவுக்காக, முதன்முறையாக, பொதுப்பணித்துறையில் தேரின் உறுதித் தன்மை குறித்து முன் உறுதிச் சான்றுக்காக விண்ணப்பிக்கப்பட்டு ஆய்வு செய்து சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தேர்களுக்கு வார்னிஷ் அடிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரத்தில், ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்படும். தேர் வேகத்தை கட்டுப்படுத்தும் முட்டிகள் செய்யும் பணிகளும் நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு இன்சூரன்ஸ்

சன்னை மற்றும் குடில் முட்டிகள் போடுபவர்களும், பக்தர்களுக்கும் மூன்றாம் நிலை இன்சூரன்ஸ் எடுக்க உள்ளோம். கடும் வெயில் என்பதால், பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர் வழங்க, மூன்று உபயதாரர்கள் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில், நான்கு ரத வீதிகளிலும் ரோடு பணிகள் தரமாக செய்து தர கேட்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு பாதுகாப்பானதா?

இரண்டு இடங்களில், மொபைல் டாய்லெட், சின்டெக்ஸ் டேங்க் மூலம் தண்ணீர் கொடுப்பதற்கும் கேட்கப்பட்டுள்ளது. மின்வாரியத்திடம் மின் இணைப்புகள் பாதுகாப்பான முறையில் உள்ளனவா என உரிய தர ஆய்வை செய்து தர கேட்டுள்ளோம். தீயணைப்புத் துறை வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியனவும் தேரோட்டத்தின் போது உடன் வரும்.

---

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவுக்காக தயாராகி வரும் பெரிய தேர்.

பெரிய தேரை அலங்கரிப்பதற்காக இரும்பு குழாய்கள் மூலம் சாரம் கட்டும் பணிகள் நடக்கின்றன.

தேரோட்டத்தின்போது போடுவதற்காக தயாராகியுள்ள குடில் முட்டிகள்.

போக்குவரத்து இடையூறு கூடாது

''திருவிழா கடைகள் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அமைப்பதற்கான வேலைகள் துவங்கும். தேரை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து தர போலீசாரிடம் கேட்டுள்ளோம்.நான்கு ரத வீதிகளிலும் டூவீலர், கார்கள், பிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றால், நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்திற்கு இடையூறாக எதுவும் இருக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். குறிப்பாக நான்கு ரத வீதிகளிலும், ஓ.ஆர்.எஸ் பவுடர், குளுக்கோஸ் ஆகியவற்றை சன்னை போடுபவர்கள், தேரை இயக்குவோர் மற்றும் பக்தர்கள் ஆகியோருக்கு வழங்க பிரத்யேக ஏற்பாடுகளை செய்துள்ளோம்'' என்றார் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார்.



மே 8, 9ல் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 5ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், மே 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருத்தேர்களுக்கு எழுந்தருளல், 8,9 ஆகிய தேதிகளில், பெரிய தேரோட்டம், 9ம் தேதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் தேரோட்டம் ஆகியன நடைபெறுகிறது.








      Dinamalar
      Follow us