/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி திருடியதை கூறியதால் மூதாட்டியை கொன்ற சிறுவன்
/
கோழி திருடியதை கூறியதால் மூதாட்டியை கொன்ற சிறுவன்
ADDED : அக் 05, 2024 12:58 AM
ஆலங்காயம்:திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம், ராஜாபாளையத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஸ்வநாதராவ் மனைவி சந்திராபாய், 75, கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். கடந்த 2ம் தேதி, வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருப்பத்துார் எஸ்.பி., ஸ்ரேயா குப்தா ஆய்வு நடத்தினார். ஆலங்காயம் போலீசார் விசாரித்தனர்.
இது தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த, 18 வயது சிறுவனை சந்தேகத்தின்படி, பிடித்து விசாரித்தனர். அப்பகுதி வீடுகளில் கோழி போன்றவற்றை அந்த சிறுவன் திருடி வந்தார். ஒரு முறை அந்த சிறுவன் கோழி திருடியதை சந்திராபாய் பார்த்து விட்டார். அவரிடம், 'வெளியில் சொல்லி விடாதீர்கள்' என, சிறுவன் கூறியுள்ளான்.
அவனை பொருட்படுத்தாமல் பலரிடம் அந்த மூதாட்டி, கோழி திருட்டு பற்றி கூறினார். இதை அறிந்து ஆத்திரமடைந்த சிறுவன், சந்திராபாய் வீட்டுக்கு சென்று, துாங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி, தலையில் இரும்பு ராடால் தாக்கி கொன்றார். ஆலங்காயம் போலீசார், அந்த சிறுவனை நேற்று கைது செய்தனர்.