sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'

/

'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'

'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'

'தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் நடத்தும் மது ஆலைகளே கள் தடைக்கு காரணம்'


ADDED : பிப் 19, 2025 10:56 PM

Google News

ADDED : பிப் 19, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் 'கள்'ளுக்கு தடை இல்லை. கேரளாவில் 'கள்' இறக்கி, பதப்படுத்தி அரசே விற்கிறது. இதன் மூலம் கேரள அரசுக்கு, ஆண்டுக்கு, 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.

தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் இருந்தும் 'கள்'ளுக்கு தடை உள்ளது. தென்னிந்தியாவிலேயே அதிகளவு தென்னை மரங்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்குள்ள மரம் ஏறும் தொழிலாளர்கள் பலர் அண்டை மாநிலங்களுக்குச் சென்று பணிபுரியும் அவலம் உள்ளது. ஊட்டச்சத்து பானமான 'கள்'ளை மதுவிலக்கு சட்டத்தின் கீழ் வைத்துள்ளதே தவறானது.

தமிழகத்தில் மட்டும் தான், அரசியல்வாதிகள் மது ஆலைகளை நடத்துகின்றனர்.

குறிப்பாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இதில் பிரதானமாக இருப்பதாலேயே 'கள்'ளுக்கான தடையை நீக்க மறுக்கின்றனர். தவறான கற்பனையை வைத்துக்கொண்டு 'கள்'ளுக்கு தடை விதித்துள்ளனர்.

இதை ஒரு சதி திட்டமாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே, கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி, 'கள்' விடுதலை மாநாடு, வரும் 24 அன்று பல்லடம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது.

இதில், தமிழக 'கள்' இயக்க தலைவர் நல்லசாமி உட்பட, பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us