நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவாசக முற்றோதல் நடந்தது.
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும், சிவாலயங்களில், திருவாசகம் முற்றோதல் நடத்தி வருகிறது, மாணிக்க வாசகர் மன்றம். அதன்படி, நேற்று, சுக்ரீஸ்வரர் கோவிலில் முற்றோதல் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு வழிபாட்டுடன் துவங்கி, அனைத்து பதிகங்களையும் பாராயணம் செய்து, வழிபட்டனர். சிவனடியார்கள், ஒவ்வொரு பதிக நிறைவிலும், சங்கொலி எழுப்பியும், தீபாராதனை செய்தும் வழிபட்டனர்.