sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க

/

கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க

கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க

கொண்டைக்கடலையை அரசே நேரடியாக கொள்முதல் செய்யுங்க


ADDED : டிச 04, 2024 10:09 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, குறிஞ்சேரி, பொட்டையம்பாளையம், கொங்கல்நகரம், விருகல்பட்டி, புதுப்பாளையம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், களிமண் விளைநிலங்கள் உள்ளது.

இந்த நிலங்களில், வடகிழக்கு பருவமழை சீசனில், மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வந்தது. நடப்பு சீசனில், குறைந்தளவே கொண்டைக்கடலை விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அறுவடை காலத்தில் ஏற்படுத்தப்படும் விலை வீழ்ச்சியே, முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் கூறியதாவது: அறுவடை சீசனில், பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டைக்கடலை இறக்குமதி செய்யப்படுவதே விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

'கருப்பு சுண்டல்' எனப்படும் கொண்டைக்கடலை பல்வேறு சத்துகளை உள்ளடக்கியதாகும். பள்ளிகளில், மாணவர்களுக்கு புரதச்சத்து மிகுந்த கொண்டைக்கடலையை வழங்கலாம்.

இதற்கு தேவையான கொண்டைக்கடலையை, விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்யலாம். ரேஷன் கடைகளிலும், விற்பனை செய்யலாம். இதனால், விலை வீழ்ச்சி தவிர்க்கப்பட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள். சாகுபடி பரப்பும் குறையாது. இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us