sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்

/

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்


ADDED : மார் 29, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடம் அருகே, அறிவொளி நகர் குடியிருப்பு பகுதியில், செப்டிக் டேங்க் நிரம்பிய நிலையில், வீட்டு வசதி வாரியம் கைவிரித்ததால், பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பல்லடத்தை அடுத்த, அறிவொளி நகரில், வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான, 544 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில், 350க்கும் அதிகமான குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்குள்ள செப்டிக் டேங்க் நிரம்பிய நிலையில், கழிவுகளை அகற்ற வேண்டி, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். பணம் செலவாகும் என்று கூறி அதிகாரிகள் கைவிரித்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த, 2015ம் ஆண்டு முதல் இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறோம். இங்கு எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையே, இங்குள்ள செப்டிக் டேங்க் நிரம்பி இரண்டு நாட்கள் ஆகின்றது. இது குறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினோம். ஆய்வு செய்த அதிகாரிகள், சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சிலரை வரவழைத்தனர். மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது என்ற கோர்ட் உத்தரவு உள்ளதை அதிகாரிகளுக்கு நினைவுபடுத்தினோம்.

இதனையடுத்து, கழிவுகள் அகற்றும் முயற்சியை கைவிட்ட அதிகாரிகள், வாகனத்தின் உதவியுடன் கழிவுகளை அகற்ற, 15 ஆயிரம் ரூபாய் செலவாகும். இத்தொகையை வைத்திருந்தால் கூறுங்கள், கழிவுகளை அகற்றித் தருகிறோம் என்று கூறி சென்றனர்.

குடியிருப்பில் உள்ளவர்கள், அன்றாடம் வேலைக்கு சென்றால்தான், குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது. இச்சூழலில், இங்குள்ளவர்கள் பணம் செலவு செய்வது இயலாத காரியம். ஊராட்சியும் கண்டுகொள்ளாத நிலையில், வீட்டு வசதி வாரிய அதிகாரிகளும் கைவிரித்ததால், துர்நாற்றத்துக்கு இடையே வாழ்ந்து வருகிறோம். மக்களின் நலன் கருதாத, அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us