sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்

/

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்

அண்ணனை துண்டு துண்டாக வெட்டிய தம்பி மீது பாய்ந்தது 'குண்டாஸ்' சட்டம்


ADDED : மார் 15, 2025 11:42 PM

Google News

ADDED : மார் 15, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி, மாமரத் தோட்டம் பகுதியில் வசிப்பவர் ரமேஷ், 43. கருவலுார் அருகே காளிபாளையம் பகுதியில் வசித்தவர் கோவிந்தசாமி,54.

ரமேஷ், கோவிந்தசாமி இருவரும் உறவு முறையில் அண்ணன், தம்பி ஆகின்றனர். கடந்த பிப்., 20ம் தேதி கோவிந்த சாமியை காணவில்லை என அவரது மகன் பிரவீன் குமார் அவிநாசி போலீ ஸில் புகார் அளித்தார்.

போலீசாரின் தீவிர விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு குறித்து பேசிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோவிந்தசாமியைரமேஷ் பலமாக தாக்கி கீழே தள்ளியுள்ளார்.

அதில், கோவிந்தசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். கோவிந்தசாமி உடலை யாருக்கும் தெரியாமல் கருவலுார் அருகே அனந்தகிரியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கோழி பண்ணையில் வைத்து கைகள்,கால்கள், தலை என தனித்தனியாக வெட்டி வெவ்வேறு பகுதியில் ரமேஷ் வீசினார்.

அதில் தொரவலுார் குளத்தில் இருந்து உடல் பகுதியும் ரமேஷின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தலை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரமேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாறு கொடுங்குற்றம் இழைத்த ரமேைஷ குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் பரிந்துரைத்தார்.

அதனடிப்படையில் கலெக்டர் கிறிஸ்துராஜ், ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள ரமேஷூக்கு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us