sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிணற்றில் குதித்தவர் பலி காப்பாற்ற முயன்றவர் மாயம்

/

கிணற்றில் குதித்தவர் பலி காப்பாற்ற முயன்றவர் மாயம்

கிணற்றில் குதித்தவர் பலி காப்பாற்ற முயன்றவர் மாயம்

கிணற்றில் குதித்தவர் பலி காப்பாற்ற முயன்றவர் மாயம்


ADDED : ஆக 23, 2025 11:59 PM

Google News

ADDED : ஆக 23, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:கிணற்றில் குதித்தவர் பலியான நிலையில், அவரை காப்பாற்ற கிணற்றில் குதித்தவரை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 37; மனைவியிடம் விவாகரத்து பெற்று, தாய் பாக்கியவதியுடன் வசித்தார்.

நேற்று முன்தினம் இரவு, மது போதையில் இருந்த நவீன்குமார், பை-பாஸ் ரோட்டில் இருந்து வாடகை காரில் வீட்டுக்கு சென்றார். கார் டிரைவரின் மொபைல் போனை வாங்கி, பாக்கியவதிக்கு தொடர்பு கொண்டு காருக்கு வாடகை தர பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து விட்டர்.

ஆத்திரமடைந்த நவீன்குமார், வீட்டுக்கு அருகிலுள்ள 160 அடி ஆழ கிணற்றில் குதித்தார். அவரது வீட்டில் வாடகைக்கு வசிக்கும் பிரவீன்ராஜ், 37, என்பவர், கிணற்றில் குதித்து நவீன்குமாரை காப்பாற்ற முயன்றார். ஆனால், இருவரும் கிணற்றில் மூழ்கினர். அவிநாசி தீயணைப்பு வீரர்கள் நேற்று நவீன்குமாரின் சடலத்தை மீட்டு, பிரவீன்ராஜை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us