ADDED : ஜூலை 10, 2025 09:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; திருப்பூர் ஒன்றியம், பெருமாநல்லுார் ஊராட்சி, அங்காளம்மன் கோவில் வீதி டெலிபோன் எக்ஸ்சேன்ச் அருகே இருந்த மின் கம்பம் ஒன்று கீழ் பகுதியில் உடைந்து விழும் நிலையில் இருந்துள்ளது. அதனை மாற்ற வேண்டுமென, அப்பகுதியினர் மின் வாரியத்தில் பல முறை முறையிட்டும் வந்துள்ளனர்.
ஆனால், கண்டு கொள்ளவில்லை.இந்நிலையில் நேற்று காலை மின் கம்பம் திடீரென உடைந்து, அருகில் இருந்த வீட்டு சுவர் மீது விழுந்தது. மின் கம்பம் விழுந்ததால், யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் மின் வினியோகம் தடைபட்டது.