sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கட்டாய கல்வி உரிமை சட்ட 'அட்மிஷன்' இணையதளத்தில் இன்னும் துவங்கலே!

/

கட்டாய கல்வி உரிமை சட்ட 'அட்மிஷன்' இணையதளத்தில் இன்னும் துவங்கலே!

கட்டாய கல்வி உரிமை சட்ட 'அட்மிஷன்' இணையதளத்தில் இன்னும் துவங்கலே!

கட்டாய கல்வி உரிமை சட்ட 'அட்மிஷன்' இணையதளத்தில் இன்னும் துவங்கலே!


ADDED : ஜூன் 02, 2025 03:54 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலை யில், தற்போது வரை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் விண்-ணப்பம், அட்மிஷன் குறி த்து எந்த அறிவிப்பும் வெளியா காமல் உள்ளது.

இதனால், பெற் றோர் கவலை அடைந்துள்ளனர்.பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், தனியார் பள்ளி

களில் இலவசமாக கல்வி பயில, வழிவகுக்கும் வகையில், 2009ல் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாணவ, மாணவியரின் கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் தனியார் பள்ளிக்கு செலுத்தும்.

எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை இலவசமாக கல்வி பயில வழிவகுக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் இணைய

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அறிவுறுத்-தல்கள் வழங்கப்படும்.

நேரடியாக இல்லாமல் ஆன்லைனில் மட்டுமே பெற்றோர் விண்ணப்பிக்க முடியும். https://tnschools.gov.in/ என்கிற பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் விபரங்கள் வெளியாகும். இது குறித்து அனைத்து மாவட்ட கல்வித்

துறைகளும் செய்திகளை வெளியிடும். ஆனால், நடப்பாண்டு, கட்டாய கல்வி உரிமை சட்ட

த்தின் கீழ் பள்ளிகளில் மாணவ, மாணவியர் இணைவதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. அறிவிப்பு இல்-லாத நிலையில், இணையதளத்திலும் இது தொடர்பான விரிவான விளக்கங்களும் இடம் பெறவில்லை.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'நடப்-பாண்டு, மத்திய அரசின் நிதி இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. எனவே, மாநில அரசு, மாவட்ட கல்வித்துறைக்கு எந்த அறிவுறுத்தல்களும் வழங்கவில்லை. ஏதேனும் அறிவுறுத்தல் வந்தால் உடனடியாக பெற்றோருக்கு

தெரிவிக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us