sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துரத்திய மக்களிடம் தப்பிக்க முயன்ற திருடன் கிணற்றில் விழுந்து காயம்

/

துரத்திய மக்களிடம் தப்பிக்க முயன்ற திருடன் கிணற்றில் விழுந்து காயம்

துரத்திய மக்களிடம் தப்பிக்க முயன்ற திருடன் கிணற்றில் விழுந்து காயம்

துரத்திய மக்களிடம் தப்பிக்க முயன்ற திருடன் கிணற்றில் விழுந்து காயம்


ADDED : நவ 02, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 02, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம் அருகே, வீட்டில் திருட வந்த நபர், பொதுமக்களிடமிருந்து தப்பிக்க ஓடிய போது கிணற்றில் விழுந்து காயமடைந்தார்.காங்கயம், தளஞ்சிக்காட்டுப் புதுாரைச் சேர்ந்தவர் சுப்புக்குட்டி, 60. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டைப் பூட்டி விட்டு, வெளியே துாங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவு நேரம் நாய் குரைத்த சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது வீட்டுக் கதவை ஒரு மர்ம நபர் உடைக்க முயற்சிப்பது தெரிந்தது. இதனை பார்த்து அவர் சத்தம் போட, அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனைப்பார்த்த அந்நபர் தப்பினார். சிறிது நேரம் தேடிப்பார்த்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை அங்கிருந்து கிணற்றிலிருந்து யாரோ சத்தம் போடவே, பொதுமக்கள் எட்டிப் பார்த்தனர்.

ஒருவர் காயமடைந்த நிலையில் இருப்பது தெரிந்தது. உடனே, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், அந்நபர் நாமக்கல்லை சேர்ந்த சக்திவேல், 42 என்பதும், சுப்புக்குட்டி வீட்டில் திருட வந்தபோது, பொதுமக்கள் துரத்தியதில், கிணற்றில் விழுந்ததும் தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us