/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இறந்தவர் உடலை 5 கி.மீ., துாரம் தொட்டிலில் துாக்கி சென்ற அவலம்
/
இறந்தவர் உடலை 5 கி.மீ., துாரம் தொட்டிலில் துாக்கி சென்ற அவலம்
இறந்தவர் உடலை 5 கி.மீ., துாரம் தொட்டிலில் துாக்கி சென்ற அவலம்
இறந்தவர் உடலை 5 கி.மீ., துாரம் தொட்டிலில் துாக்கி சென்ற அவலம்
ADDED : ஜூலை 22, 2025 11:29 PM

உடுமலை; உடுமலை அருகே இறந்தவர் உடலை 5 கி.மீ., துாரம் தொட்டிலில் துாக்கிச்சென்ற அவலம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம்,உடுமலை வனச்சரகத்துக்குட்பட்டதுஈசல் திட்டு மலைவாழ் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த,மணியன், 50, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத்தலைவராக இருந்தார்.
அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். ஈசல்திட்டு மலையடிவாரத்தில் நேற்று காலை இறந்தார்.
இறந்தவர் உடலை, அவர் வசித்த மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு கொண்டு செல்ல சாலை வசதியில்லாத நிலையில், சடலத்தை தொட்டில் கட்டி, 5 கி.மீ., துாரம், கரடு, முரடான மலைப்பாதையில் உறவினர்கள் துாக்கிச்சென்றனர். இறப்புக்குபின், இறுதிச்சடங்கு செய்ய கூட, இத்தகைய சிரமங்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மலைவாழ் மக்கள் கூறுகையில், 'ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். மலைப்பகுதிகளில் உடல் நலம் பாதித்தவர்கள், இறந்தவர்களை தொட்டில் கட்டி துாக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது; மிகவும் சிரமப்படுகிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.