/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்
/
பயன்பாடற்ற பல்நோக்கு மையம் பாழடையும் அவலம்
ADDED : ஜன 08, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி ஊராட்சி, சிங்கப்பூர் நகரில், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 2019--20ம் ஆண்டு பல்நோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டது. 7 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இக்கட்டடம், திறப்பு விழாவும் செய்யப்பட்டது.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. பொதுமக்களுக்கான எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் இருக்க, 7 லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் முடங்கி கிடக்கிறது.
கட்டடத்தை ஏதேனும் ஒரு பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.