/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்
/
மனைவி வந்தார் கணவர் மகிழ்ந்தார்
ADDED : ஜன 09, 2024 01:00 AM

திருப்பூர்;திருப்பூர், மங்கலத்தை சேர்ந்தவர் சரவணன். மாற் றுத்திறனாளி. இவர் மனைவி வீட்டு வேலைக்காக மலேஷியா சென்றிருந்தார்.
குறைந்த சம்பளம் காரணமாக மலேஷியாவில் தவித்த மனைவி தனலட்சுமியை மீட்டுத்தரக் கேட்டு, கடந்த 2023 அக்., மாதம், இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் வந்து, திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்தில் சரவணன் மனு அளித்தார்.
இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவன தலைவர் இந்திராசுந்தரம், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து, மாற்றுத்திறனாளி சரவணனின் மனைவியை மலேஷியாவிலிருந்து மீட்பதற்கு உதவினார். கடந்த பத்து நாட்களுக்கு முன் திருப்பூர் திரும்பிய தனலட்சுமி, கணவர் சரவணனுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தன்னை மீட்க உதவிய கலெக்டர் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனர் ஆகியோருக்கு சரவணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.