sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்

/

அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்

அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்

அவிநாசிக்கு வந்த தலைக்காவிரி தீர்த்தம் ஊர்வலமாக சுமந்து சென்ற பெண்கள்


ADDED : ஜன 29, 2024 11:44 PM

Google News

ADDED : ஜன 29, 2024 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், வரும் 2ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக, 24ம் தேதி மஹா கணபதி ேஹாமத்துடன் யாக பூஜைகள் துவங்கின.

நேற்று மாலை யாகசாலை பூஜையின் துவக்கமாக, காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக, 27ம் தேதி கர்நாடக மாநிலம், தலைக்காவிரிக்கு தீர்த்தம் எடுத்து வர பக்தர்கள் சென்று, நேற்று முன்தினம் இரவு திரும்பியனர்.

இதனை தொடர்ந்து, பக்தர்கள் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலும், தீர்த்தக்குடம் சுமந்தும், முளைப்பாலிகை எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். சிவகண பூத வாத்தியங்களை சிவனடியார்கள் இசைக்க, குதிரை நாட்டியமாட, ஊர்வலம் கோவிலை அடைந்தது. அதன்பின், யாகசாலையில், தீர்த்தக்குடங்களை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us