ADDED : பிப் 19, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், பாளையக்காடு, ஆர்.எஸ்., புரம் - சஞ்சய்நகர் சந்திப்பு இடையே, வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
எஸ்.ஐ., பாபு மற்றும் போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அர்ஜூன், 31 என்பதும், விடுமுறை தினமான நேற்று, நண்பர்களை காண தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு இறந்ததும், தெரிய வந்தது.

