/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
/
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்
ADDED : ஜூன் 24, 2025 12:36 AM

திருப்பூர்; திருப்பூர் கலெக்டராக கிறிஸ்துராஜ், கடந்த 2023, மே மாதம் பொறுப்பேற்றார். இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவர், சுற்றுலா மேம்பாட்டு கழக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி முன்னாள் கமிஷனர் நாரணவரே மனிஷ் சங்கர் ராவ், திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2014ல், மும்பையில் மருத்துவ படிப்பு முடித்துள்ளார். 2017ல், திருச்சி மாவட்டத்தில் உதவி கலெக்டராகவும், 2018ல், நெல்லையில் சப்-கலெக்டர், 2020 ல், சென்னையில் வணிகவரித்துறை அமலாக்க பிரிவு இணை கமிஷனர், 2021ல், சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை துணை கமிஷனர் என பணிபுரிந்துள்ளார். 2022ல், சென்னையில் கூடுதல் இயக்குனராக (ஊரக வளர்ச்சி) பணிபுரிந்த இவர், 2024, ஜூலை மாதம் முதல் ஈரோடு மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு, பணிபுரிந்துவந்தார்.
நடப்பாண்டு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, நாரணவரே மனிஷ், தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். கர்நாடகாவை சேர்ந்த சுயே., பெண் வேட்பாளர் ஒருவரின் மனு ஏற்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில், தேர்தல் கமிஷன் இவர் மீது நடவடிக்கை எடுத்தது.
தற்போது அவர், திருப்பூர் மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ல் தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை, எட்டு கலெக்டர்கள் பணிபுரிந்துள்ளனர். மாவட்டத்தில் ஒன்பதாவது கலெக்டராக நாரணவரே மனிஷ் சங்கர் ராவ் பொறுப்பேற்க உள்ளார்.