/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் வரும் 8-ம் தேதி பங்கேற்கலாம்
/
திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் வரும் 8-ம் தேதி பங்கேற்கலாம்
திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் வரும் 8-ம் தேதி பங்கேற்கலாம்
திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் வரும் 8-ம் தேதி பங்கேற்கலாம்
ADDED : நவ 03, 2024 11:14 PM
திருப்பூர்; இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை - அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று துவங்குகிறது.
தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இன்று காலை 5:00 மணிக்கு பி.ஆர்.எஸ்., வளாகத்தில் துவங்குகிறது.
வரும் 7ம் தேதி நீலகிரி, பெரம்பலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
8ம் தேதி சென்னை, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, சேலம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, துாத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் விருதுநகரை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கு முதற்கட்டமாக உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அது முடிந்த பின்பு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்பின்பு 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.