sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று

/

தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று

தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று

தீரன் சின்னமலை கல்லுாரியில் பசுமையின் 'தீரம்' பேச மரக்கன்று


ADDED : ஜன 01, 2024 11:20 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள வஞ்சிபாளையத்தில், கொங்கு வேளாளர் அறக்கட்டளை சார்பில், தீரன் சின்னமலை மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரி வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், மரக்கன்று நட்டு கொண்டாடினர். கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை வகித்தார். ஸ்தாபன தலைவர் 'ஜீப்ரா' பழனிசாமி, 'வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராம் முன்னிலை வகித்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், கல்லுாரி குழுவின் பிரியதர்ஷினி ஈஸ்வரமூர்த்தி, ரேகா மகேஷ்குமார், தங்கராஜ் உள்ளிட்டோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

கல்லுாரி நடைபாதை மற்றும் வளாகத்தில், மகிழம், இலுப்பை, தேக்கு, நெட்டிலிங்கம், துாங்குவாகை மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us