/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு
/
நிழற்கூரை இல்லை; பயணியர் தவிப்பு
ADDED : பிப் 05, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை வெஞ்சமடையில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் தவித்து வருகின்றனர்.
உடுமலை பழநி ரோட்டில், சில ஆண்டுகளுக்கு முன் விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது, வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின், நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், அங்கு பஸ் ஏற வரும் பயணியர், வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

