sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

/

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்

குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தும் மின்கம்பம்


ADDED : நவ 27, 2024 09:18 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; குடியிருப்பு பகுதியில், அச்சுறுத்தும் மின்கம்பத்தை மாற்றியமைத்து, மின்விபத்தை தவிர்க்க கொடுங்கியம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை ஒன்றியம், கொடுங்கியம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளின் மின்வினியோகம் மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளது.

குறிப்பாக, கிராமத்தின் தலைவாசல் பகுதியில் ஒரு மின்கம்பம் மோசமான நிலையில் உள்ளது. தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கான மின் ஒயர்கள் பொருத்தப்பட்ட இடத்தில், கம்பத்தில் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, கம்பி மட்டுமே உள்ளது.

ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பத்தால், மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us