sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

களைகட்டியது திருமூர்த்திமலை

/

களைகட்டியது திருமூர்த்திமலை

களைகட்டியது திருமூர்த்திமலை

களைகட்டியது திருமூர்த்திமலை


ADDED : ஜன 16, 2025 05:54 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பொங்கல் விடுமுறை காரணமாக, திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவியில் சுற்றுலா பயணியர் திரண்டனர்.

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்க அருவி, மலையடிவாரத்தில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, திருமூர்த்திமலைக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் வந்திருந்தனர்.

மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில், நீர் ஆர்ப்பரித்து கொட்டிய நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலிலும், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்கள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பொதுமக்கள் வந்திருந்ததால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.






      Dinamalar
      Follow us