/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் டிச.,௩௦க்குள் மனு அளிக்க கெடு
/
திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் டிச.,௩௦க்குள் மனு அளிக்க கெடு
திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் டிச.,௩௦க்குள் மனு அளிக்க கெடு
திருப்பூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்பு கூட்டம் டிச.,௩௦க்குள் மனு அளிக்க கெடு
ADDED : டிச 14, 2024 03:06 AM
திருப்பூர்: ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்-கில், வரும் ஜன., 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
ஓய்வூதிய இயக்குனர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, ஓய்வூதியர்களின் குறைகளை கேட்க உள்-ளனர்.தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலு-வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதது உள்-பட எவ்வித குறைகள் இருப்பினும், மனுவாக எழுதி, கலெக்ட-ரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) வரும் 30ம் தேதிக்குள் கிடைக்கும்வகையில், நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி-வைக்கவேண்டும். மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுவோர், அரசு போக்குவரத்து கழகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் இந்த கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க கூடாது. ஓய்வூதியர்கள், தங்-கள் கோரிக்கைகளை, சங்கம் மூலம் அல்லாமல் நேரடி விண்ணப்-பமாக அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.