/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாய்கள் பிரச்னையை முன்னெடுத்த திருப்பூர்
/
நாய்கள் பிரச்னையை முன்னெடுத்த திருப்பூர்
ADDED : ஆக 24, 2025 06:59 AM
மாநிலம் முழுக்க தற்போது தெருநாய் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அதற்கு, அடித்தளமிட்டது, திருப்பூர் மாவட்டம் தான். வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்களின் கடிக்கு ஆளாகி, நுாற்றுக்கணக்கில் ஆடுகள் பலியாகின. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, போராட்டத்தில் குதித்தனர்.'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். விளைவாக, நாய்கள் கடித்து பலியாகும் ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு, கடந்த, மார்ச் 21ம் தேதி பிறப்பித்தது; இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் தற்போது நிறைவடைந்துவிட்டது என்று கூறப்படுவதால், கால்நடை வளர்ப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.