/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
/
திருப்பூர் மேற்கு ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 10, 2025 11:32 PM

அவிநாசி; திருப்பூர் மேற்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தின், 2025--26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, மங்கலம் - வெள்ளஞ்செட்டிபாளையத்தில் உள்ள திருப்பூர் மேற்கு ரோட்டரி மஹாலில் நடைபெற்றது. எஸ்.டி., எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவன தலைவரும், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொதுச் செயலாளருமான திருக்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், திருப்பூர் மேற்கு ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சிவப்பிரகாஷ், மண்டல ஒருங்கிணைப்பாளர் குமார செந்தில் ராஜா, ரோட்டரி தலைவர் சுவாமி ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், துணை கவர்னர் சண்முகசுந்தரம், செயலாளர் நடராஜன், பொருளாளர் அமிர்தம் ஈஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதன்பின், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்துக்கு, 2025--26ம் ஆண்டுக்கான புதிய தலைவராக ஆறுமுகன், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக செந்தில் பிரபு மற்றும் பல சேவைக்குழுக்களின் நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர்.
விழாவில், ரோட்டரி முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் கார்த்திக்குமார், பொருளாளர் சிவக்குமார், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பிற ரோட்டரி சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்.