ADDED : ஆக 14, 2011 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : குடிநீர் நீரேற்று நிலையங்களில், மின் பராமரிப்பு பணி
நடப்பதால், வரும் 16ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது.கமிஷனர்
ஜெயலட்சுமி அறிக்கை: மேட்டுப்பாளையம் முதல் மற்றும் இரண்டாவது குடிநீர்
நீரேற்று நிலையங்களில், 16ம் தேதி மின் பராமரிப்பு பணி நடப்பதால்,
மோட்டார் இயக்கம் தடைபடும்; திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரும் 16ம்
தேதியன்று குடிநீர் வினியோகம் இருக்காது; பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக,
சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார்.