sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை 4,700 மாணவர்கள் விண்ணப்பம்

/

கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை 4,700 மாணவர்கள் விண்ணப்பம்

கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை 4,700 மாணவர்கள் விண்ணப்பம்

கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை 4,700 மாணவர்கள் விண்ணப்பம்


ADDED : ஆக 14, 2011 03:07 AM

Google News

ADDED : ஆக 14, 2011 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் முத்துசாமி தலைமை வகித்தார்; அலுவலக கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் அலு வலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க, பெறப்படும் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் முறை குறித்து விளக்கப்பட்டது. மாணவர் பெயரில் வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். கணக்கு எண் மற்றும் வங்கி குறியீட்டு எண்கள் முறையாக அளிக்க வேண்டும். பெயர் எழுதும் போது 'இனிஷியல்' பெயருக்குப் பின்னால் எழுத வேண்டும். அரசு பள்ளி, தனியார் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்கள் 14ம் தேதிக்குள், புதிய விண்ணப்பங்கள் வரும் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்தாண்டு தாமதமாக அளிக்கப்பட்ட பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன; குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.ரூ. 1.17 கோடி உதவி வழங்கல்:திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 35 கல்லூரிகளில் பயிலும் கல் லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும் ஆண்டுதோறும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் பிற்பட்ட இனத்தை சேர்ந்த 3,664 மாணவர்களுக்கு 80,41,720 ரூபாய் வழங்கப்பட்டது; மிகவும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த 1,598 பேருக்கு 36,93,328 ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 17 லட்சத்து 35 ஆயிரத்து 58 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.நடப்பாண்டில் புதுப்பித்தல் மற்றும் புதிய கல்வி உதவித் தொகைக் கான விண்ணப்பங்கள் கல்வி நிறு வனங்கள் மூலமாக பெறப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் 2,437 பேர் கல்வி உதவி பெற்றுள்ளனர். உயர்நிலை பள்ளி அளவில் 3,900 பேர்; மேல்நிலை அளவில் 800 பேர் என 4,700 பேர் விண்ணப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us