/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழிலாளர் சம்பள உயர்வு: "டீமா' அறிவிப்பு
/
தொழிலாளர் சம்பள உயர்வு: "டீமா' அறிவிப்பு
ADDED : செப் 21, 2011 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :பனியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக, தொழிற்சங்கங்கள், 'டீமா'விடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதுதொடர்பாக 'டீமா' சங்க நிர்வாக கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதில், அடுத்த மாதம் 3ம் தேதி மகாசபை கூட்டத்தை நடத்தி முடிவு செய்யப்படும். அதன் பின், தொழிற்சங்கங்களை அழைத்து பேச, சங்கம் தயாராக உள்ளது. தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க, அனைத்து உற்பத்தியாளர் சங்கங்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும், என்று 'டீமா' தலைவர் முத்து ரத்தினம் தெரிவித்துள்ளார்.