sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா

/

நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா

நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா

நொய்யல் நதிக்கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா


ADDED : ஜன 09, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி உடன் இணைந்து நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பிலும், ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பிலும் கலை நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா நடத்தப்படவுள்ளது.

அவ்வகையில், நொய்யல் பண்பாட்டு கழகம் சார்பில், வரும் 15ம் தேதி, மாலை 4:00 மணிக்கு சமத்துவப் பொங்கல் மற்றும் சமத்துவ கும்மி நடைபெறும். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பாராட்டு விழாவும் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 16ம் தேதி மாலை 4:30 மணிக்கு, பறையிசை, பரத நாட்டியம், செண்டை மேளம், கிராமிய இசை கச்சேரி, களரி மற்றும் கம்பத்தாட்டம் ஆகியன நடக்கிறது.

1008 பானையில் பொங்கல்


ஜீவநதி நொய்யல் சங்கம், 'நிட்மா', திருப்பூர் மாநகராட்சி ஆகியன இணைந்து, 17ம் தேதி, காலை பொங்கல் விழா நடத்துகின்றன. அன்று காலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கும் விழாவில், தொடர்ந்து 1008 பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், பெருஞ்சலங்கையாட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியன நடக்கிறது.

அதன்பின் மாலை, 4:30 மணிக்கு கிராமிய இசை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது. பொங்கல் விழாவுக்காக, நொய்யல் ஆற்றில், வளர்மதி பாலம் முதல் ஈஸ்வரன் கோவில் பாலம் வரை சுத்தப்படுத்தம் பணி துவங்கியுள்ளது.






      Dinamalar
      Follow us