sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

/

'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்

'டிட்டோஜாக்' உறுப்பினர்கள் உண்ணாவிரத போராட்டம்


ADDED : ஜன 28, 2024 12:03 AM

Google News

ADDED : ஜன 28, 2024 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

தொடக்ககல்வித்துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும், அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். பேச்சுவார்த்தையின், 12 கோரிக்கை தொடர்பான ஆணைகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த உண்ணாவிரதத்தை, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் கனகராஜ் துவக்கி வைத்தார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி பாலசுப்பிரமணியம், தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டபிறகு, உண்ணாவிரதம் நிறைவு பெற்றது. போராட்டத்தை, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொதுசெயலாளர் ராஜேந்திரன் முடித்து வைத்தார். திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us