sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி

/

தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி

தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி

தக்காளி மகசூல் பாதிப்பு; விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சி


ADDED : ஆக 29, 2025 01:50 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், நடப்பு பருவத்தில், 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை துவங்கியுள்ளது.

உடுமலை நகராட்சி சந்தை மற்றும் கிராமங்களிலுள்ள விற்பனை மையங்களுக்கு, தினமும், தலா, 14 கிலோ கொண்ட ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்துள்ளது. தக்காளி மகசூல் பெருமளவு குறைந்துள்ள நிலையில், விலையும் சரிவால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடிக்கு, ஏக்கருக்கு, ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. நாற்று நடவு செய்து, 55வது நாள் முதல், 50 நாட்களுக்கு, 1,500 பெட்டிகள் வரை மகசூல் இருக்கும்.

நடப்பு பருவத்தில், வெயில், மழை என சீதோஷ்ண நிலை மாற்றம், வைரஸ் நோய், ஊசி புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் காரணமாக, மருந்து செலவு அதிகரித்ததோடு, மகசூலும், 80 சதவீதம் வரை குறைந்து, இரு பறிப்புகளில், 150 பெட்டி மட்டுமே கிடைத்து வருகிறது.

ஒரு பெட்டி, ரூ.750 வரை விற்று வந்த நிலையில், காய்களும் சிறிதாக மாறி, தற்போது, ரூ.200 முதல், 300 வரை மட்டுமே விற்று வருகிறது. நடப்பு பருவத்தில் தக்காளி சாகுபடி விவசாயிகளுக்கு பெரிய அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தாததால், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us