sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20

/

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து; கிலோ ரூ.20


ADDED : டிச 20, 2024 04:11 AM

Google News

ADDED : டிச 20, 2024 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ, 20 ரூபாய்க்கு திருப்பூரில் தக்காளி விற்கப்படுகிறது.

பெஞ்சல் புயல் காரணமாக, பத்து நாட்களுக்கு முன் தொடர் மழை பெய்ததால், சந்தைக்கான தக்காளி வரத்து பாதிக்கப்பட்டது. ஒரு கிலோ, 35 - 40 ரூபாயாக தக்காளி விலை உயர்ந்தது. மொத்த விலையில் வாங்கி விற்பவர்கள், இரண்டு கிலோ, 100 ரூபாய்க்கு விற்று வந்தனர்.

மார்கழி மாதம், சபரிமலை சீசன் காரணமாக காய்கறி, தக்காளி விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. நல்ல லாபத்தை எதிர்பார்த்த மொத்த வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து தக்காளிகளை மொத்தமாக, ஒன்று முதல் மூன்று டன் வரை வாங்கி விற்க திட்டமிட்டனர்.

அதற்குள் உள்ளூரில் மழை குறைந்ததால், வரத்து இயல்பானது. கடந்த ஒரு வாரமாக தெற்கு மற்றும் வடக்கு உழவர் சந்தைக்கான தக்காளி வரத்து முறையே, 32 மற்றும் 8 டன்னாக உள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட், தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, 80 - 95 டன் தக்காளி குவிகிறது. இதனால், உள்ளூர் தக்காளி, முதல் தரத்தின் விலை சற்று குறைந்து, கிலோ, 25 - 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேநேரம், வரத்து அதிகரிப்பதால், வெளிமாநில தக்காளி விலை கிலோ, 20 ரூபாயாக குறைந்துள்ளது. மொத்தமாக ஆட்டோ, தள்ளுவண்டிகளில் வாங்கி விற்போர், ஐந்து கிலோ, 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.

சுவை இருக்காது

''கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வந்த தக்காளி விலை மலிவாக இருந்தாலும், இவை சுவை இருக்காது. ஒரே நாளில் கனிந்து விடும்'' என்கின்றனர், உழவர் சந்தை விவசாயிகள்.








      Dinamalar
      Follow us