/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை மறுதினம் 'தினமலர்' நாளிதழ் இன்ஜி., வழிகாட்டி
/
நாளை மறுதினம் 'தினமலர்' நாளிதழ் இன்ஜி., வழிகாட்டி
ADDED : ஜூன் 26, 2025 11:41 PM
திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நாளை மறுதினம் (29ம் தேதி) நடக்கிறது.
'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2025 வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் வரும், 29ம் தேதி, காலை 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
'தினமலர்' நாளிதழுடன், கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ், சேரன் குரூப் ஆப் இன்ஸ்டிடியூசன்ஸ், ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் நேரடி விளக்கம் அளிக்கின்றனர்.
இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், என்ன பாடப்பிரிவுக்கு என்ன எதிர்காலம், கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் எனும் தலைப்பில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் புருேஷாத்தமன், 'வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா ஆகியோர் விரிவான ஆலோசனை வழங்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதி இலவசம்.