sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சந்தை நாளில் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

சந்தை நாளில் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சந்தை நாளில் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சந்தை நாளில் போக்குவரத்து நெரிசல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : டிச 04, 2024 10:10 PM

Google News

ADDED : டிச 04, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; வாரச்சந்தை கூடும் நாளில், ரோட்டோரத்தில் அமைக்கப்படும் கடைகளால், செஞ்சேரிமலை ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க பெதப்பம்பட்டி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி பெதப்பம்பட்டியில், சில ஆண்டுகளுக்கு முன், செஞ்சேரிமலை ரோட்டில், நிரந்தர கட்டடம், 40 லட்ச ரூபாயில் கட்டப்பட்டது. தற்போது வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, இச்சந்தை கூடுகிறது.

சந்தை வளாகத்திலுள்ள கடைகள் மட்டுமல்லாது, செஞ்சேரிமலை ரோட்டின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

பெதப்பம்பட்டி நால்ரோட்டில் இருந்து வாரச்சந்தை தாண்டி குறிப்பிட்ட துாரத்துக்கு, இவ்வாறு அமைக்கப்படும் கடைகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறுகலான இடத்தில், இந்த கடைகளை அமைப்பதால், செஞ்சேரிமலை மற்றும் இதர வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் அப்பகுதியை கடக்க திணறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பொருட்களை வாங்குபவர்களும் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திக்கொள்வதால், விபத்துகள் ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்படும் கடைகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை, குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெதப்பம்பட்டி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us