/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
/
மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : நவ 22, 2025 05:27 AM
உடுமலை: பஸ் ஸ்டாண்டுக்குள் புறநகர் பஸ்கள் செல்லாமல் ரோட்டிலேயே நின்று செல்வதால், மடத்துக்குளத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் டவுன்பஸ்கள் தவிர, புறநகர் பஸ்கள் செல்வதில்லை.
புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வெளியே, தேசிய நெடுஞ்சாலையில் நின்று, பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விபத்துகளும் நிகழும் வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ்ஸ்டாண்டுக்குள் சென்று திரும்ப, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

