sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

/

 உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

 உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்

 உழவர் சந்தை ரோட்டில் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஜன 01, 2026 05:35 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் வருகின்றனர்.

இங்கு, அனைத்து வகை காய்கறிகளும் கிடைப்பதால், மக்களும் ஆர்வத்துடன் வந்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.

உழவர்சந்தையின் வெளியில், ரோட்டில் காலை நேரங்களில் தற்காலிக காய்கறி உட்பட பல்வேறு கடைகள் போடப்படுகின்றன.

இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமலும், பிற வாகனங்கள் செல்வதிலும் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us