ADDED : ஜூலை 07, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலை நேரங்களில் அமைக்கப்படும், தற்காலிக கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உழவர்சந்தை செயல்படுகிறது. இந்த சந்தை முன்புறம், காலை நேரங்களில் திறந்த வெளியில் காய்கறி கடைகள் போடப்படுகிறது.
இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.