ADDED : செப் 15, 2025 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள், புறநகர் பஸ்கள் செல்லாமல், ரோட்டில் நின்று பயணியரை ஏற்றிச்செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் உள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்குள் டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை. இவை தேசிய நெடுஞ்சாலையில் நின்று பயணியரை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன.
இதனால், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.