ADDED : ஜூன் 30, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் - மதுரை இடையே, வடுகபட்டி - சோழவந்தான் வழியில் மின்பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால், கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் (எண்:16322) ஜூலை 1 மற்றும், 2ம் தேதி திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். மதியம், 1:15க்கு ரயில் திண்டுக்கல்லில்நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பின், மாலை, 3:45க்கு ரயில் திண்டுக்கல்லில் இருந்துநாகர்கோவிலுக்கு ஜூலை 1ம் தேதி மட்டும் இயக்கப்படும்.