sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பயிற்சி

/

 திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பயிற்சி

 திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பயிற்சி

 திறன் மேம்பாட்டு மையங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு பயிற்சி


ADDED : பிப் 20, 2026 04:39 AM

Google News

ADDED : பிப் 20, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தொழில் நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சிக்கண்ணா கல்லுாரியில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, துவக்கி வைத்தார். தொழில் நெறி வழிகாட்டி புத்தகம் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கை துவக்கி வைத்து, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது:

ஒவ்வொரு போட்டித்தேர்வையும் லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். ஆனால், பணியிடங்கள் எண்ணிக்கை, ஆயிரம் மட்டுமே இருக்கும். ஆகவே, திட்டமிட்டு படிக்க வேண்டும். போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் என்னென்ன என்பதை தெரிந்து வைத்திருக்கவேண்டும். தற்போது, புத்தகங்கள், நுாலக வசதிகள் உள்ளன.

மாணவர்கள் விடா முயற்சியோடு தேர்வுக்கு தயாராகவேண்டும். பின்னலாடை உற்பத்தி நகரான திருப்பூரில், ஏற்றுமதியாளர்கள் சங்கமும், திறன் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்படுத்தி வருகின்றன.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us