sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி

/

கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி

கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி

கோர்ட்டில் இ-பைலிங் நடைமுறை வருவாய் துறையினருக்கு பயிற்சி


ADDED : ஜன 05, 2024 01:29 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, இ-பைலிங் முறையில் வழக்குப்பதிவு செய்வது குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

கோர்ட்களில் தற்போது வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறைகள், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, இ-பைலிங் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்குகள் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்வது இ-பைலிங் முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ-பைலிங் நடைமுறை குறித்து, வக்கீல்கள், கோர்ட் ஊழியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு துறைகளில், கோர்ட் மற்றும் வழக்கு விவகாரங்களை கையாளும் ஊழியர்களுக்கு இ-பைலிங் நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நீதித்துறை சார்பில், வருவாய்த்துறை அலுவலர்களுக்கான இ-பைலிங் பயிற்சி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கம்ப்யூட்டர் பிரிவினர் இ-பைலிங் முறையில் வழக்கு தாக்கல் செய்வது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கையாள்வது குறித்து பயிற்சி அளித்தனர்.






      Dinamalar
      Follow us