/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்கூரை இல்லாததால் பயணியர் தவிப்பு
/
நிழற்கூரை இல்லாததால் பயணியர் தவிப்பு
ADDED : செப் 18, 2024 08:49 PM
உடுமலை : உடுமலை தளி ரோடு யூனியன் ஆபீஸ் நிறுத்தத்தில், நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவ, மாணவியர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இதில், யூனியன் பஸ் நிறுத்தம் முக்கியமானதாக உள்ளது.
ஆனால் இங்கு நிழற்கூரை இல்லாததால், பொதுமக்கள், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நகராட்சிக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அமைக்கப்படவில்லை. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.