/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு திட்ட முறைகேடு த.வெ.க.வினர் போராட்டம்
/
திடக்கழிவு திட்ட முறைகேடு த.வெ.க.வினர் போராட்டம்
திடக்கழிவு திட்ட முறைகேடு த.வெ.க.வினர் போராட்டம்
திடக்கழிவு திட்ட முறைகேடு த.வெ.க.வினர் போராட்டம்
ADDED : பிப் 01, 2026 07:01 AM
திருப்பூர்: மங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.க.வினர், 'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.இதுகுறித்து விசாரணைக்குழு அமைக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தினர்.
நேற்று முன்தினம் மாலை, ஊராட்சி அலுவலகம் சென்ற த.வெ.க.வினர், தாங்கள் வலியுறுத்திய கோரிக்கை தொடர்பான தீர்மான நகலை வழங்குமாறு கேட்டனர். அதற்கு அலுவலர்கள் தாமதம் செய்ததால், த.வெ.க. திருப்பூர் மேற்கு மாவட்ட வக்கீல் அணி ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார், தலைமையில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, 'அந்த கோரிக்கை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்' என, விளக்கமளித்தனர். இதனை தொடர்ந்து, த.வெ.க.வினர் கலைந்து சென்றனர்.

