sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

/

தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்


ADDED : ஜூலை 31, 2025 11:27 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அருகே, எண்ணற்ற நிழல் தரும் மரங்கள், தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.

பல்லடம் அடுத்த, இச்சிப்பட்டி கிராமம், -அய்யன்கோவில் செல்லும் வழியில், புதிய மின்கம்பங்கள் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, ரோட்டோரத்தில் இருந்த, 15க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்கள், இறைச்சிக் கூடங்களில் ஆடு மாடுகள் வெட்டுவது போல் தாறுமாறாக வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. மின்கம்பங்களுக்கு இடையூறு எனில் கிளைகளை மட்டுமே வெட்டி அகற்றலாம்.

ஆனால், இவ்வாறு, பசுமையான மரங்களை மொட்டையாக்கி, வேருடன் வீழ்த்துவது நியாயமா என, பசுமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இது மின்கம்பங்களை நடுவதற்காக நடந்த சம்பவமாக இல்லை.

மாறாக, மரங்களை வெட்டி கடத்தும் நாடகமாகவே, பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

எதிர்வரும் நாட்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us