/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
/
மாநகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 17, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர், 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பணி நிறைவு பாராட்டு விழா, பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் ராதாமணி, வரவேற்றார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் தேவராஜன், மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, மண்டல உதவி கமிஷனர் முருகேசன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று பரிசுகளை வழங்கி பேசினர்.
விழா முடிவில், மாணவ, மாணவியரின் வண்ணமிகு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.