ADDED : ஏப் 05, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து த.வெ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இணை செயலாளர் சுகுமார், பொருளாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர்.
மாநகர் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பங்கேற்ற தொண்டர்கள், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷமிட்டனர்.