ADDED : பிப் 20, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காங்கயம், முல்லை நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன், 54.
இவரது மனைவி ஈஸ்வரி, 48. தம்பதி டூவீலரில் காங்கயம் - கரூர் ரோட்டில் முத்துார் பிரிவு அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. தம்பதி படுகாயமடைந்து, ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று மாலை சத்யநாராயணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

